Thursday, September 13, 2012

குய்க் இனிப்பு பணியாரம்

Photobucket Pictures, Images and Photos

தேவையான பொருட்கள்: 

ரவை - 1 1/2 கப் 
மைதா - 1/2 கப் 
சீனி (அ ) சக்கரை - 1/2 கப் (இது மிதமான அளவு, அதிகம் இனிப்பு விருப்பம் உள்ளவர்கள் அதற்கேற்ப இனிப்பை சேர்க்கவும்)
ஏலக்காய் பொடி -1 சிட்டிகை 
Baking சோடா - 1 சிட்டிகை  

செய்முறை :

1. ஒரு பாத்திரத்தில், ரவை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 10 நிமிடம் ரவையை ஊற வைத்து கொள்ளவும்.
2. பேகிங் சோடாவை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் ரவையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். தேவை பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். கடைசியாக பேகிங் சோடா சேர்த்து அதன் மேல் 2 ஸ்பூன் நீர் விட்டு பின் நன்கு கலந்து 2 நிமிடம் ஊற விடவும்.
3. பணியாரக் கல்லை அடுப்பிலேற்றி நெய் தடவி, கலந்த மாவை ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவைத்து எடுக்கவும்.
Evening பலகாரம் ரெடி.

Monday, September 10, 2012

ஈசி வாழைக்காய் வறுவல் 

Photobucket Pictures, Images and Photos

தேவையான பொருட்கள் :

வாழைக்காய் - 2
மஞ்சள் தூள் - 1/2 tbs 
மிளகாய் தூள் - 1tbs 
இஞ்சி பூண்டு விழுது - 1/2 tbs 
உப்பு தேவையான அளவு 

செய்முறை:

1. வாழைக்காயை காம்பு நீக்கி தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
2. உப்பு மற்றும் இதர பொருட்களை சேர்த்து பிரட்டி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
3. தோசை கல்லை அடுப்பிலேற்றி, கல் காய்ந்ததும் சிறிது எண்ணை விட்டு ஊறிய வாழைக்காயை ஒன்றோடொன்று ஒட்டாமல் பரப்பவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி எண்ணை விட்டு வறுத்தெடுக்கவும். 
4. பிடிக்கும் என்றால் கடைசியாக காய் சூடாக இருக்கும் போதே கொஞ்சம் எலுமிச்சைச்சாறு தெளித்து பரிமாறலாம்.



Tuesday, April 3, 2012

பீட்ரூட் கட்லெட்





தேவையான பொருட்கள்:
எண்ணெய் - மூன்று ஸ்பூன் 
சீரகம் (அ) சோம்பு (அ) ஓமம் - சிறிது (சுவைக்கேற்ப )
மெலிதாக துருவிய பீட் ரூட் - இரண்டு கப் 
பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கியது - அரை கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - இரண்டு ஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் , மல்லி தூள் - தலா அரை ஸ்பூன் 
வேகவைத்து மசித்த உருளை கிழங்கு - ஒரு கப்
உப்பு தேவையான அளவு
பொடிதாக அரிந்த மல்லிதழை - ஒரு கைப்பிடி
எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன் 
காய்ந்த பிரட் தூள் - நான்கு ஸ்பூன்

செய்முறை:
  1. அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஓமம், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
  2. துருவிய பீட் ரூட் சேர்த்து வதக்கி , மூடி போட்டு மிதமான தீயில் பீட் ரூட்டை பச்சை வாடை போகும் வரை வேக விடவும். தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.
  3. மசாலா பொடிகள் சேர்த்து ஐந்து  நிமிடம் வதக்கவும். தேவைபட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம். 
  4. மசித்த உருளை கிழங்கு, மல்லிதழை,  எலுமிச்சை சாறு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
  5. இந்த கலவையை நன்கு ஆறியதும் , ஒரே அளவிலான உருண்டைகள் பிடித்து வடைபோல் தட்டி, பிரட் தூளில் பிரட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
  6. அடுப்பில் தோசை கல் வைத்து, லேசாக எண்ணை விட்டு கட்லெட் இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.
  7. சாதம் வகைகளுக்கு தொட்டு கொள்ளலாம். மாலை சிற்றுண்டியாகவும் பரிமாறலாம்.  

Wednesday, September 14, 2011

முருங்கை தொக்கு

ரசம் சாதம் / சப்பாத்திக்கு உகந்த சைடு டிஷ். என் அம்மாவிடம் இருந்து கற்றுகொண்ட குறிப்பு இது.  


தேவையான பொருட்கள்:

முருங்கை - 2 (சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்)\
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு, சோம்பு, கருவேப்பிலை - கொஞ்சம்
வெங்காயம் - பெரியது ஒன்று - நீளமாக  நறுக்கியது
தக்காளி - பெரியது ஒன்று - நீளமாக நறுக்கியது
சாம்பார் பொடி- 2 ஸ்பூன்
உப்பு , மஞ்சள் தூள், எலுமிச்சை பழச்சாறு - கொஞ்சம்

அரைக்க:

தேங்காய் துருவல் / பல் - ஒரு கைப்பிடி
சோம்பு - அரை ஸ்பூன்
பூண்டு - 1
வறுத்த நிலக்கடலை - கொஞ்சம் (optional )
மிளகாய் வத்தல் - 2
(லேசாக நீர் விட்டு நன்கு மையாக அரைத்து கொள்ளவும்)

செய்முறை:


 முருங்கை மூழ்கும் அளவு நீர் விட்டு, கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து காய் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும். மீதி நீரை பின் வடித்து விடலாம்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, பின் வேக வைத்த முருங்கை, சாம்பார் பொடி, உப்பு, இத்துடன் சேர்த்து கிளறி 5 நிமிடம் குறைந்த தணலில் சமைக்கவும்.


அரைத்த தேங்காய் விழுதை காயுடன் சேர்த்து கிளறி 2 நிமிடம் வேகவிடவும்.

அடுப்பை அணைக்கும் முன் மல்லிதழை, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி விடவும்.

Monday, September 12, 2011

சிம்பிள் உருளைக்கிழங்கு ப்ரை



சப்பாத்தி/ வெரைட்டி ரைஸ்-க்கு  தொட்டு கொள்ள சீக்கிரமாய் சமைக்க கூடியது. வெங்காயம், தக்காளி எதுவும் நறுக்க தேவையில்லை. உருளைக்கிழங்கு மட்டும் வெட்டினால் போதும்.

 
தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 5 ஸ்பூன்
உருளைக்கிழங்கு - கால் கிலோ (உங்களுக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கி கொள்ளவும் )
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் : மல்லி தூள் (1 : 1 1 /2 ) (அல்லது) மிளகு தூள் - உங்கள் கார விருப்ப அளவை பொருத்து. நான் மிளகு தூள் சேர்த்துள்ளேன்.
உப்பு, மல்லி இலை - தேவைக்கேற்ப
தேங்காய் பவுடர் (optional ) - 1 ஸ்பூன்

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருளைகிழங்கை சேர்த்து லேசாக வதக்கவும். இதன் மேல் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் (அ) மிளகு தூள் , உப்பு சேர்த்து கிளறவும். தேவைபட்டால் கால் டம்ளர் நீர் விட்டு கிளறினால் உப்பு, காரம் சீராக இருக்கும்.

குறைந்த தணலில் 10 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும். (உருளை கிழங்கை பெரிதாக நறுக்கி இருந்தால் வேக சற்று நேரம் பிடிக்கும்).
 

மல்லி தலை, தேங்காய் பவுடர் சேர்த்து இறக்கி விடலாம்.

Wednesday, September 7, 2011

வறுத்து அரைத்த சிக்கன் கிரேவி

 
தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - பொடியாக அரிந்தது - 3
தக்காளி - பொடியாக அரிந்தது - 4
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - இரண்டு ஸ்பூன்
மல்லி தூள் - மூன்று ஸ்பூன்
சீரக தூள் - இரண்டு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
கிராம்பு - 4
சோம்பு, மிளகு - அரை ஸ்பூன்
பட்டை, பிரிஞ்சி இலை, ஸ்டார் பிரிஞ்சி, ஏலக்காய் - 3 சிறிய பீஸ்
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
(மேற்சொன்ன அனைத்தையும் எண்ணெய் விடாமல் வறுத்து தேங்காய் துருவலுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து வைத்து கொள்ளவும்)
தாளிக்க :
சமையல் எண்ணெய் - 7 ஸ்பூன்
கடுகு, உளுந்து, கருவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை:
  1. கடாயில் எண்ணெய் விட்டு, கடு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
  2.  
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளி நீர் விட்டு நன்கு கூழ் ஆகும் வரை வதக்கவும்.
  4.  
  5. சிக்கனை சுத்தம் செய்து, கழுவி இத்துடன் சேர்த்து வதக்கவும். பின் அணைத்து பொடி வகைகள் + உப்பு சேர்த்து 15 -20 நிமிடம் மிதமான சூட்டில் மூடி போட்டு சமைக்கவும். தண்ணீர் விட தேவையில்லை.
  6.  
  7. சிக்கன் நீர் விட்டு நன்கு வெந்திருக்கும். இப்போது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து கிளறி 5 நிமிடம் சமைக்கவும்.
அரிந்த கொத்தமல்லி தூவி பரிமாறுங்கள்.... கம கம சிக்கன் கிரேவி!

 
சென்ற வாரம் எங்கள் வீட்டில் நடந்த நட்பு விருந்தின் போது... மேற்சொன்ன அதே சிக்கன் கிரேவி வித் வெஜ் பிரயாணி!

Wednesday, May 11, 2011

ரவா புட்டு

புட்டு மேகர் இல்லாம குய்க்கா ஒரு புட்டு செய்து சாப்பிடலாம் வாங்க....

தேவையான பொருட்கள்:
  1. ரவை - ஒரு கப்
  2. தேங்காய் துருவல் - கால் கப்
  3. கிஸ்-மிஸ் பழம்+முந்திரி பருப்பு - கொஞ்சம்
  4. கொதிக்க வைத்த தண்ணீர் - 2 கப் (இதை முதல் வேலையாக செய்து வைத்து கொண்டு களத்தில் இறங்குங்கள் !)
  5. சீனி - அரை கப் (உங்கள் தேவைகேற்ப கூட்டி/குறைத்து கொள்ளுங்கள்)
  6. நெய் - 6 ஸ்பூன்
செய்முறை:
 ஒரு நாண்-ஸ்டிக் கடாயில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு முந்திரி பருப்பு + கிஸ்-மிஸ் பழம் சேர்த்து வறுத்து கொள்ளுங்கள். கடைசியாக தேங்காய் துருவலையும் சேர்த்து லேசாக வதக்கி வைத்து கொள்ளுங்கள். 


அதே கடாயில் 2 ஸ்பூன் நெய்விட்டு ரவையை வறுக்கவும். ரவை வறுபட்டதும் கால் டம்ளர் கொதிக்க வைத்த சூடான தண்ணீரை சேர்த்து கட்டி சேராமல் கிளறுங்கள். தண்ணீர் வற்றியதும் திரும்ப கால் டம்ளர் சுடுநீர் சேர்த்து கட்டி சேராமல் கிளறுங்கள். இது போல் ரவை வேகும் வரை செய்யவும். தேவைபட்டால் கொஞ்சம் நெய் சேர்த்து கொள்ளுங்கள்.
கொதிக்க வைத்த மொத்த நீரையும் யூஸ் பண்ணனும்னு அவசியம் இல்ல, ரவை வெந்ததும் நிறுத்தி விடுங்கள்.  4  - 5 முறை நீர் சேர்த்து வதக்கியதுமே ரவை வெந்து விடும். இது சிம்பிள் தான்.

அடுப்பை அணைத்து விட்டு, தேங்காய் துருவல், சீனி, மீதமுள்ள நெய் சேர்த்து நன்றாக கிளறுங்கள். அவ்ளோதான் புட்டு ரெடி.
சூடா சாப்டாலும் சரி / ஆறியபின் சாப்பிட்டாலும் சரி, சுவையா இருக்கும்.
என் பொண்ணுக்கு இந்த இனிப்பு ரொம்ப பிடித்தது.  அவளால் அப்படியே சாப்பிட முடியாது (இப்போ தான் ஒரு வயதை நெருங்குகிறாள்), வெறும் ரவை போர்ஷனை மட்டும் சுவைத்து சாபிட்டா.... 
Related Posts Plugin for WordPress, Blogger...