என்னடா புத்தாண்டு வாழ்த்து மட்டும் சொல்லிட்டு ரெசிபி தராம போய்டாளே-ன்னு பார்தீங்களா. மதுரை சித்திரை திருவிழா-காக புத்தாண்டு அன்று குடும்பத்தோடு கிளம்பி விட்டோம் (என் கணவர் ஊர் மதுரை). மதுரை சித்திரை திருவிழா முதன் முறையா பார்கிறேன், அப்பப்பா கொள்ளை அழகு. திருவிழாவை பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் புகைப்படத்தோடு சேகரித்து உள்ளேன், விரைவில் அந்த பதிவை எதிர் பாருங்கள்.
திருவிழா முடிந்து அம்மா வீட்டுக்கும் (காரைக்குடி) வந்தாச்சு !! என் குழந்தையை குளிபாட்டுவதில் இருந்து தூங்க வைக்கும் வரை எல்லாத்தையும் அம்மா-விடம் outsource செய்துவிட்டு சந்தோசமாக நாட்களை நகர்த்தி கொண்டிருகிறேன்.
ஓகே ஓகே சொந்த கதை சோக (சந்தோஷ ryt?? ) கதையை விட்டுட்டு ரெசிபி-க்கு வருவோம்.
அது என்ன செய்முறை(1 )? அப்போ செய்முறை(2 ) வேற இருக்கானு question வந்துருச்சா? வெரி குட். இது சேமியாவில் செய்தது. அரிசியிலும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
பால் - 4 கப்
சேமியா - 2 கப் (வறுத்தது, வறுக்காதது எதுவானாலும் ஓகே)
சீனி - 1 கப்
ஏலக்காய் போடி - ஒரு சிட்டிகை
ஒரு கரண்டி நெய்யில் வருத்த முந்திரி பருப்பு (10 ) + உலர் திராட்சை (6 )
செய்முறை:
பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் காய்ச்சுங்கள்.
3 கப் தண்ணீரை காய வைத்து அதில் சேமியாவை சேர்த்து கொதிக்க விடவும். சேமியா வெந்ததும் தண்ணீரை நன்றாக வடித்து விடவும்.
பால் கொதித்து கொஞ்சம் வற்றியதும் வேக வைத்த சேமியாவை சேருங்கள். சேமியாவை பாலிலும் வேக வைக்கலாம். ஆனால் எதாவது டெக்னிகல் பால்ட் ஆகி பால் திரிஞ்சு போயிடுச்சுனா, அப்புறம் பாலும் கிடையாது! பாயசமும் கிடையாது!
5 நிமிடம் கழித்து வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏல பொடி, சீனி சேர்த்து நன்றாக கலக்கவும். சூடாக / குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.
என் அம்மா மீன் வறுக்கும் வாசனை மூக்கை துளைக்குது. bye bye!