Showing posts with label பலகாரம். Show all posts
Showing posts with label பலகாரம். Show all posts

Thursday, September 13, 2012

குய்க் இனிப்பு பணியாரம்

Photobucket Pictures, Images and Photos

தேவையான பொருட்கள்: 

ரவை - 1 1/2 கப் 
மைதா - 1/2 கப் 
சீனி (அ ) சக்கரை - 1/2 கப் (இது மிதமான அளவு, அதிகம் இனிப்பு விருப்பம் உள்ளவர்கள் அதற்கேற்ப இனிப்பை சேர்க்கவும்)
ஏலக்காய் பொடி -1 சிட்டிகை 
Baking சோடா - 1 சிட்டிகை  

செய்முறை :

1. ஒரு பாத்திரத்தில், ரவை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 10 நிமிடம் ரவையை ஊற வைத்து கொள்ளவும்.
2. பேகிங் சோடாவை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் ரவையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். தேவை பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். கடைசியாக பேகிங் சோடா சேர்த்து அதன் மேல் 2 ஸ்பூன் நீர் விட்டு பின் நன்கு கலந்து 2 நிமிடம் ஊற விடவும்.
3. பணியாரக் கல்லை அடுப்பிலேற்றி நெய் தடவி, கலந்த மாவை ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவைத்து எடுக்கவும்.
Evening பலகாரம் ரெடி.

Tuesday, April 3, 2012

பீட்ரூட் கட்லெட்





தேவையான பொருட்கள்:
எண்ணெய் - மூன்று ஸ்பூன் 
சீரகம் (அ) சோம்பு (அ) ஓமம் - சிறிது (சுவைக்கேற்ப )
மெலிதாக துருவிய பீட் ரூட் - இரண்டு கப் 
பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கியது - அரை கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - இரண்டு ஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் , மல்லி தூள் - தலா அரை ஸ்பூன் 
வேகவைத்து மசித்த உருளை கிழங்கு - ஒரு கப்
உப்பு தேவையான அளவு
பொடிதாக அரிந்த மல்லிதழை - ஒரு கைப்பிடி
எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன் 
காய்ந்த பிரட் தூள் - நான்கு ஸ்பூன்

செய்முறை:
  1. அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஓமம், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
  2. துருவிய பீட் ரூட் சேர்த்து வதக்கி , மூடி போட்டு மிதமான தீயில் பீட் ரூட்டை பச்சை வாடை போகும் வரை வேக விடவும். தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.
  3. மசாலா பொடிகள் சேர்த்து ஐந்து  நிமிடம் வதக்கவும். தேவைபட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம். 
  4. மசித்த உருளை கிழங்கு, மல்லிதழை,  எலுமிச்சை சாறு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
  5. இந்த கலவையை நன்கு ஆறியதும் , ஒரே அளவிலான உருண்டைகள் பிடித்து வடைபோல் தட்டி, பிரட் தூளில் பிரட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
  6. அடுப்பில் தோசை கல் வைத்து, லேசாக எண்ணை விட்டு கட்லெட் இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.
  7. சாதம் வகைகளுக்கு தொட்டு கொள்ளலாம். மாலை சிற்றுண்டியாகவும் பரிமாறலாம்.  

Wednesday, May 11, 2011

ரவா புட்டு

புட்டு மேகர் இல்லாம குய்க்கா ஒரு புட்டு செய்து சாப்பிடலாம் வாங்க....

தேவையான பொருட்கள்:
  1. ரவை - ஒரு கப்
  2. தேங்காய் துருவல் - கால் கப்
  3. கிஸ்-மிஸ் பழம்+முந்திரி பருப்பு - கொஞ்சம்
  4. கொதிக்க வைத்த தண்ணீர் - 2 கப் (இதை முதல் வேலையாக செய்து வைத்து கொண்டு களத்தில் இறங்குங்கள் !)
  5. சீனி - அரை கப் (உங்கள் தேவைகேற்ப கூட்டி/குறைத்து கொள்ளுங்கள்)
  6. நெய் - 6 ஸ்பூன்
செய்முறை:
 ஒரு நாண்-ஸ்டிக் கடாயில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு முந்திரி பருப்பு + கிஸ்-மிஸ் பழம் சேர்த்து வறுத்து கொள்ளுங்கள். கடைசியாக தேங்காய் துருவலையும் சேர்த்து லேசாக வதக்கி வைத்து கொள்ளுங்கள். 


அதே கடாயில் 2 ஸ்பூன் நெய்விட்டு ரவையை வறுக்கவும். ரவை வறுபட்டதும் கால் டம்ளர் கொதிக்க வைத்த சூடான தண்ணீரை சேர்த்து கட்டி சேராமல் கிளறுங்கள். தண்ணீர் வற்றியதும் திரும்ப கால் டம்ளர் சுடுநீர் சேர்த்து கட்டி சேராமல் கிளறுங்கள். இது போல் ரவை வேகும் வரை செய்யவும். தேவைபட்டால் கொஞ்சம் நெய் சேர்த்து கொள்ளுங்கள்.
கொதிக்க வைத்த மொத்த நீரையும் யூஸ் பண்ணனும்னு அவசியம் இல்ல, ரவை வெந்ததும் நிறுத்தி விடுங்கள்.  4  - 5 முறை நீர் சேர்த்து வதக்கியதுமே ரவை வெந்து விடும். இது சிம்பிள் தான்.

அடுப்பை அணைத்து விட்டு, தேங்காய் துருவல், சீனி, மீதமுள்ள நெய் சேர்த்து நன்றாக கிளறுங்கள். அவ்ளோதான் புட்டு ரெடி.
சூடா சாப்டாலும் சரி / ஆறியபின் சாப்பிட்டாலும் சரி, சுவையா இருக்கும்.
என் பொண்ணுக்கு இந்த இனிப்பு ரொம்ப பிடித்தது.  அவளால் அப்படியே சாப்பிட முடியாது (இப்போ தான் ஒரு வயதை நெருங்குகிறாள்), வெறும் ரவை போர்ஷனை மட்டும் சுவைத்து சாபிட்டா.... 

Wednesday, April 20, 2011

பால் பாயசம் - செய்முறை(1 )

 என்னடா புத்தாண்டு வாழ்த்து மட்டும் சொல்லிட்டு ரெசிபி தராம போய்டாளே-ன்னு பார்தீங்களா. மதுரை சித்திரை திருவிழா-காக புத்தாண்டு அன்று குடும்பத்தோடு கிளம்பி விட்டோம் (என் கணவர் ஊர் மதுரை). மதுரை சித்திரை திருவிழா முதன் முறையா பார்கிறேன், அப்பப்பா கொள்ளை அழகு. திருவிழாவை பற்றி  உங்களோடு பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் புகைப்படத்தோடு சேகரித்து உள்ளேன், விரைவில் அந்த பதிவை எதிர் பாருங்கள்.
திருவிழா முடிந்து அம்மா வீட்டுக்கும் (காரைக்குடி) வந்தாச்சு !! என் குழந்தையை குளிபாட்டுவதில் இருந்து தூங்க வைக்கும் வரை எல்லாத்தையும் அம்மா-விடம் outsource செய்துவிட்டு சந்தோசமாக நாட்களை நகர்த்தி  கொண்டிருகிறேன்.
ஓகே ஓகே சொந்த கதை சோக (சந்தோஷ ryt?? ) கதையை விட்டுட்டு ரெசிபி-க்கு வருவோம்.



அது என்ன செய்முறை(1 )? அப்போ செய்முறை(2 ) வேற இருக்கானு question வந்துருச்சா? வெரி குட். இது சேமியாவில் செய்தது. அரிசியிலும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

பால் - 4 கப்
சேமியா - 2 கப் (வறுத்தது, வறுக்காதது எதுவானாலும் ஓகே)
சீனி - 1 கப்
ஏலக்காய் போடி - ஒரு சிட்டிகை
ஒரு கரண்டி நெய்யில் வருத்த முந்திரி பருப்பு (10 ) + உலர் திராட்சை (6 )

செய்முறை:

  1. பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் காய்ச்சுங்கள்.
  2. 3 கப் தண்ணீரை காய வைத்து அதில் சேமியாவை சேர்த்து  கொதிக்க விடவும். சேமியா வெந்ததும் தண்ணீரை நன்றாக வடித்து விடவும்.
  3. பால் கொதித்து கொஞ்சம் வற்றியதும் வேக வைத்த சேமியாவை சேருங்கள். சேமியாவை பாலிலும் வேக வைக்கலாம். ஆனால் எதாவது டெக்னிகல் பால்ட் ஆகி பால் திரிஞ்சு போயிடுச்சுனா, அப்புறம் பாலும் கிடையாது! பாயசமும் கிடையாது!
  4. 5 நிமிடம் கழித்து வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏல பொடி, சீனி சேர்த்து நன்றாக கலக்கவும்.  சூடாக / குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.

என் அம்மா மீன் வறுக்கும் வாசனை மூக்கை துளைக்குது. bye bye! 

Thursday, April 14, 2011

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

உங்கள் வருகைக்கு நன்றி. புத்தாண்டு பலகாரம் எடுத்துகோங்க !

Related Posts Plugin for WordPress, Blogger...