Showing posts with label சப்பாத்திக்கு. Show all posts
Showing posts with label சப்பாத்திக்கு. Show all posts

Wednesday, September 14, 2011

முருங்கை தொக்கு

ரசம் சாதம் / சப்பாத்திக்கு உகந்த சைடு டிஷ். என் அம்மாவிடம் இருந்து கற்றுகொண்ட குறிப்பு இது.  


தேவையான பொருட்கள்:

முருங்கை - 2 (சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்)\
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு, சோம்பு, கருவேப்பிலை - கொஞ்சம்
வெங்காயம் - பெரியது ஒன்று - நீளமாக  நறுக்கியது
தக்காளி - பெரியது ஒன்று - நீளமாக நறுக்கியது
சாம்பார் பொடி- 2 ஸ்பூன்
உப்பு , மஞ்சள் தூள், எலுமிச்சை பழச்சாறு - கொஞ்சம்

அரைக்க:

தேங்காய் துருவல் / பல் - ஒரு கைப்பிடி
சோம்பு - அரை ஸ்பூன்
பூண்டு - 1
வறுத்த நிலக்கடலை - கொஞ்சம் (optional )
மிளகாய் வத்தல் - 2
(லேசாக நீர் விட்டு நன்கு மையாக அரைத்து கொள்ளவும்)

செய்முறை:


 முருங்கை மூழ்கும் அளவு நீர் விட்டு, கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து காய் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும். மீதி நீரை பின் வடித்து விடலாம்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, பின் வேக வைத்த முருங்கை, சாம்பார் பொடி, உப்பு, இத்துடன் சேர்த்து கிளறி 5 நிமிடம் குறைந்த தணலில் சமைக்கவும்.


அரைத்த தேங்காய் விழுதை காயுடன் சேர்த்து கிளறி 2 நிமிடம் வேகவிடவும்.

அடுப்பை அணைக்கும் முன் மல்லிதழை, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி விடவும்.

Monday, September 12, 2011

சிம்பிள் உருளைக்கிழங்கு ப்ரை



சப்பாத்தி/ வெரைட்டி ரைஸ்-க்கு  தொட்டு கொள்ள சீக்கிரமாய் சமைக்க கூடியது. வெங்காயம், தக்காளி எதுவும் நறுக்க தேவையில்லை. உருளைக்கிழங்கு மட்டும் வெட்டினால் போதும்.

 
தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 5 ஸ்பூன்
உருளைக்கிழங்கு - கால் கிலோ (உங்களுக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கி கொள்ளவும் )
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் : மல்லி தூள் (1 : 1 1 /2 ) (அல்லது) மிளகு தூள் - உங்கள் கார விருப்ப அளவை பொருத்து. நான் மிளகு தூள் சேர்த்துள்ளேன்.
உப்பு, மல்லி இலை - தேவைக்கேற்ப
தேங்காய் பவுடர் (optional ) - 1 ஸ்பூன்

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருளைகிழங்கை சேர்த்து லேசாக வதக்கவும். இதன் மேல் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் (அ) மிளகு தூள் , உப்பு சேர்த்து கிளறவும். தேவைபட்டால் கால் டம்ளர் நீர் விட்டு கிளறினால் உப்பு, காரம் சீராக இருக்கும்.

குறைந்த தணலில் 10 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும். (உருளை கிழங்கை பெரிதாக நறுக்கி இருந்தால் வேக சற்று நேரம் பிடிக்கும்).
 

மல்லி தலை, தேங்காய் பவுடர் சேர்த்து இறக்கி விடலாம்.

Friday, March 18, 2011

மிளகு காளான் / பெப்பர் மஸ்ரூம்

எங்க செட்டியாருக்கு (காரைக்குடி பக்கம் கணவரை இப்படிதான் சொல்லுவாங்க) ரொம்ப பிடிச்ச ரெசிபி -ங்கோ !!!

காளானை இந்த முறையில் செய்யும் போது கூடுதல் ருசியாக இருக்கும். மிளகு காரம் உடலுக்கு நல்லது.

தேவையான பொருட்கள்:


எண்ணெய் தேவையான அளவு
கடுகு, உளுந்து, கருவேப்பிலை
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - இரண்டு
பச்சை மிளகாய் நறுக்கியது - 1
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகு தூள் - இரண்டு ஸ்பூன்
காளான் - நறுக்கியது - 250 கிராம்
உப்பு தேவையான அளவு
இந்த செய்முறைக்கு தண்ணீர் தேவை இல்லை

செய்முறை:


கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடவும். பின்பு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.


பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கிய காளான் -ஐ இதோடு சேர்த்து வதக்கவும்.


இரண்டு நிமிடம் கழித்து காளான் நன்றாக தண்ணீர் விடும். இப்பொழுது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, மூடி விடவும்.


ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை காளான்-ஐ நன்கு கிளறி விடவும். 15 நிமிடத்தில் தண்ணீர் முற்றிலும் வற்றி விடும்.


இப்போது அடுப்பை அணைத்து விட்டு மிளகு தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டால் வேலை முடிந்தது !!!! :)

குறிப்பு :
தயிர் சாதம், லெமன் சாதம், சப்பாத்தி இவற்றுடன் மிக நன்றாக இருக்கும்.

Sunday, February 13, 2011

அவரைக்காய் கூட்டு


கொஞ்சம் கார-சார-மான ரெசிபி. சாதாரண அவரைக்காய் பொரியலை விட இந்த செய்முறையில் அவரைக்காய் ரொம்ப சுவையா இருக்குன்னு என் கணவர் சர்டிபிகேட் குடுத்தார்.

தேவையான பொருட்கள்

அவரைக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் -1 பெரியது
தக்காளி - 1 பெரியது
மஞ்சள் தூள் - கொஞ்சம்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எலுமிச்சை பழ சாறு - 2 ஸ்பூன்
உப்பு

தாளிக்க

எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, கருவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை

  1. கொஞ்சம் அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
  2. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. நறுக்கிய தக்காளியை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். இப்போது கொஞ்சம் உப்பு சேர்த்து கொண்டால் தக்காளி சுலபமாக வதங்கும்.
  4. அவரகாயை சேர்த்து ஒரு வதக்கு வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூளை சேர்க்கவும். இத்துடன் கொஞ்சம் உப்பு, 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விடவும்.
  5. தண்ணீர் நன்கு வற்றும் வரை காயை வேக விடவும். இப்போது எலுமிச்சை பழ சாரை சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
  6. ரசம் சாதம் / தயிர் சாதம் / சப்பாத்தி - உடன் பரிமாறலாம்.

Friday, February 11, 2011

பீன்ஸ் பருப்பு மசியல்

என் கணவர் சரியான சப்பாத்தி பிரியர். எனக்கும் சப்பாத்தி-கும் ஆகாது !!! ( என்ன ஒரு ஜோடி பொருத்தம் இல்ல :) ) . அதுனால சப்பாத்தி-க்கு சைடு டிஷ் தயாரிக்கும் பொது அது நமக்கும் வேலைக்கு ஆகுமா-ன்னு பார்த்து தான் செய்வேன். அப்டி கண்டு பிடிச்சது தான் இந்த பருப்பு மசியல்.
இது ஒரு மிக சுலபமான ரெசிபி. சப்பாத்தி, சாதம் இரண்டிற்கும் பரிமாறலாம்.



தேவையான பொருட்கள் :
பீன்ஸ் - கொஞ்சம் (நறுக்கியது )
துவரம் பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் -ஒன்று
தக்காளி - ஒன்று
உப்பு - தேவைக்கு ஏற்ப

தாளிக்க :
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
கடுகு , கருவேப்பில்லை - கொஞ்சம்

செய்முறை:
  1. கொஞ்சம் எண்ணெய் விட்டு பீன்சை லேசாக வதக்கவும் (பச்சை வாடை போவதற்கு)
  2. பருப்பு, தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் & மிளகாய் தூள், உப்பு, புளி + இரண்டு கப் தண்ணீர் , அனைத்தையும் பீன்சொடு சேர்க்கவும் . தக்காளி , மிளகாய் எல்லாம் நறுக்கனும்னு அவசியம் இல்ல. (காய், பருப்பை எல்லாம் கொஞ்சம் கழுவிட்டு போடுங்கப்பா !)
  3. நாலு இல்ல ஐந்து விசில் குக்கரில் வைக்கவும் (2-3 விசில் கூட போயிட்டாலும் பரவா இல்லை )
  4. குக்கர் விசில் அடங்கியதும் மூடிய திறந்து லைட்டா கடையனும்.
  5. கடைசியா மேல தாளிச்சு கொட்ட வேண்டியது தான்.

குறிப்பு:

  • காய் எதுவும் போடாம, வெறும் பருப்பு கடைந்தலும் சுவையா இருக்கும்.
  • பீன்ஸ்-கு பதிலா சவ்-சவ், முட்டைகோஸ் , புடலங்காய் சேத்துக்கலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...