Sunday, February 13, 2011

அவரைக்காய் கூட்டு


கொஞ்சம் கார-சார-மான ரெசிபி. சாதாரண அவரைக்காய் பொரியலை விட இந்த செய்முறையில் அவரைக்காய் ரொம்ப சுவையா இருக்குன்னு என் கணவர் சர்டிபிகேட் குடுத்தார்.

தேவையான பொருட்கள்

அவரைக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் -1 பெரியது
தக்காளி - 1 பெரியது
மஞ்சள் தூள் - கொஞ்சம்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எலுமிச்சை பழ சாறு - 2 ஸ்பூன்
உப்பு

தாளிக்க

எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, கருவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை

  1. கொஞ்சம் அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
  2. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. நறுக்கிய தக்காளியை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். இப்போது கொஞ்சம் உப்பு சேர்த்து கொண்டால் தக்காளி சுலபமாக வதங்கும்.
  4. அவரகாயை சேர்த்து ஒரு வதக்கு வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூளை சேர்க்கவும். இத்துடன் கொஞ்சம் உப்பு, 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விடவும்.
  5. தண்ணீர் நன்கு வற்றும் வரை காயை வேக விடவும். இப்போது எலுமிச்சை பழ சாரை சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
  6. ரசம் சாதம் / தயிர் சாதம் / சப்பாத்தி - உடன் பரிமாறலாம்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...