Friday, March 25, 2011

இடியாப்பம் - முட்டை கறி

பேரு தான் முட்டை கறின்னு போட்டிருக்கு, ஆனா முட்டையவே காணம்னு பாக்கறீங்களா? இது உடைச்சு ஊற்றின முட்டை கறி.
இந்த காம்பினேசன் எங்க செட்டியார் (என் கணவர்) கண்டுபிடிச்சது.

தேவையான பொருட்கள்
முட்டை - இரண்டு
எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
கடுகு, உளுந்து, சோம்பு , கருவேப்பிலை - தாளிக்க
பெரிய வெங்காயம் - ஒன்று பொடியாக நறுக்கியது
தக்காளி - இரண்டு பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
உப்பு -கொஞ்சம்
எலும்பிச்சை சாறு - 3 ஸ்பூன்

செய்முறை
1 . கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சோம்பு , கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
2 . வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி வதக்கும் போது கொஞ்சம் உப்பு சேர்த்தால் தக்காளி சுலபமாக வதங்கும்.
3 . மஞ்சள், மிளகாய், மல்லி தூள் சேர்த்து கிளறவும். 2 கப் தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்றாக கொதிக்க விடவும். இப்போது முட்டை உடைத்து ஊற்றி விடலாம். முட்டை ஊற்றியபின் கொஞ்ச நேரம் கிளற வேண்டாம்.
4 . பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு உப்பு, எலும்பிச்சை சாறு சேர்த்து கிளறவும். முட்டை கறி ரெடி !!!

குறிப்பு
முட்டை உடைத்து ஊற்றிய பின் அடுப்பை மிதமான சூட்டிற்கு குறைத்து விடவும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...