Wednesday, September 14, 2011

முருங்கை தொக்கு

ரசம் சாதம் / சப்பாத்திக்கு உகந்த சைடு டிஷ். என் அம்மாவிடம் இருந்து கற்றுகொண்ட குறிப்பு இது.  


தேவையான பொருட்கள்:

முருங்கை - 2 (சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்)\
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு, சோம்பு, கருவேப்பிலை - கொஞ்சம்
வெங்காயம் - பெரியது ஒன்று - நீளமாக  நறுக்கியது
தக்காளி - பெரியது ஒன்று - நீளமாக நறுக்கியது
சாம்பார் பொடி- 2 ஸ்பூன்
உப்பு , மஞ்சள் தூள், எலுமிச்சை பழச்சாறு - கொஞ்சம்

அரைக்க:

தேங்காய் துருவல் / பல் - ஒரு கைப்பிடி
சோம்பு - அரை ஸ்பூன்
பூண்டு - 1
வறுத்த நிலக்கடலை - கொஞ்சம் (optional )
மிளகாய் வத்தல் - 2
(லேசாக நீர் விட்டு நன்கு மையாக அரைத்து கொள்ளவும்)

செய்முறை:


 முருங்கை மூழ்கும் அளவு நீர் விட்டு, கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து காய் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும். மீதி நீரை பின் வடித்து விடலாம்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, பின் வேக வைத்த முருங்கை, சாம்பார் பொடி, உப்பு, இத்துடன் சேர்த்து கிளறி 5 நிமிடம் குறைந்த தணலில் சமைக்கவும்.


அரைத்த தேங்காய் விழுதை காயுடன் சேர்த்து கிளறி 2 நிமிடம் வேகவிடவும்.

அடுப்பை அணைக்கும் முன் மல்லிதழை, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி விடவும்.

7 comments:

GEETHA ACHAL said...

வாவ்...ரொம்ப அருமையாக இருக்கின்றது...கடைசியில் சேர்க்கும் பொருட்கள் சூப்பர்ப்....

சாருஸ்ரீராஜ் said...

சூப்பரா இருக்கு

Asiya Omar said...

வாவ் ! சூப்பர்.போட்டோவும் நச்சென்று இருக்கு.

ஆயிஷா said...

சூப்பரா இருக்கு

Raks said...

Very interesting recipe, bookmarking this :)

Sanghi said...

murungai curry super.. kandippa try panren..!;)visit my blog!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்


இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

அறிமுகம் செய்தவர்-காவியகவி


பார்வையிடமுகவரி-வலைச்சரம்


அறிமுகம் செய்த திகதி-25.07.2014

-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்-

Related Posts Plugin for WordPress, Blogger...